தஞ்சாவூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்ததாக செயலர் உள்பட 2 பேர் கைது.!

0 2470

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தானிய கடன் மற்றும் மருந்து கொள்முதலில் முறைகேடு செய்ததாக செயலர் உள்பட இருவரை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செயலாளராக உள்ள கும்பகோணத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், மருந்தாளுனராக பணிபுரியும் தென்சருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரியும், தானிய கடன் வசூலில் முறைகேடு, 2017 முதல் 2019ஆண்டு வரயிலான மருந்து கொள்முதலில் முறைகேடு என 34 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக கும்பகோணம் கூட்டுறவு துணை பதிவாளர் அட்சய பிரியா புகாரளித்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments